தாராளமயமாக்கம்
அரசு சார்ந்த அனைத்து துறைகளிலும் அரசின் கட்டுப்பாட்டை நீக்கி தனியாரின் பங்கேற்பை அதிகரித்தல் எனும் செயலே தாராளமயமாக்கம் எனப்படும். இதனால் தரமான உற்பத்தி பொருள், நியாயமான விலை, நீடித்து உழைக்கும் தன்மை, மக்களின் தேவை நிறைவேற்றம் ஆகியவை எளிதில் நிறைவு பெறுகின்றன. மேலும், உள்நாட்டு உற்பத்தி, விநியோகம், அந்நிய செலாவணி ஆகியவை அதிகரிக்கின்றன.