Posts

மாதிரி வினாத்தாள் தேர்வு

     இன்று காலை 2- ம் பாட வேலையில் 10- ம் வகுப்பு மாணவர்களுக்கு காலாண்டு தேர்வுக்காக தயார் செய்ய வேண்டிய நிலையால் பழைய மாதிரி வினாத்தாள்கள் கொண்டு அவர்களுக்கு தேவையான பயிற்சி அளிக்கப்பட்டது.      அடுத்து 8- ம் வகுப்பு மாணவர்களுக்கு சென்ற ஆண்டு முதல் பருவ வினாத்தாள் கொண்டு தேர்வு எழுத பயிற்சி அளிக்கப்பட்டது.      அதேபோல் 7-ம் வகுப்பு மாணவர்களுக்கு மாதிரி வினாத்தாள் கொண்டு பயிற்சி அளிக்கப்பட்டது.      இவர்களுக்கு பாடத்தை மீண்டும் திருப்புதல் செய்யும் பொழுது ஆசிரியர் பாடக்கருத்துக்கள் அனைத்தையும் மீண்டும் ஒரு முறை தொகுத்து வழங்கினார்.  

வடிவியல் பயற்சி

     இன்று 8- ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு  "வடிவியல்"  பாடத்தில் உள்ள அனைத்து வகையான தலைப்புகளையும் மாணவர்களுக்கு புரியும்படி தெளிவாக நடத்தினேன்.       வடிவியலில் உள்ள நான்கு வகையான படங்களும், அவை வரையும் முறைகள், அதற்கான அளவீடுகள், பரப்பளவு காணும் முறைகள் என அனைத்தும் துல்லியமாக அளவிட மாணவர்கள் கற்றுக் கொண்டனர்.      மேலும், மாணவர்கள் தங்கள் சந்தேகங்களை ஆசிரியரிடம் கேட்டு தெரிந்து கொண்டனர்.  இதனால் மாணவர்களும் வடிவியல் படம் வரைதல்,  துல்லியமாக அளவிடும் முறைகள் இவற்றில் தேர்ச்சி பெற கற்றுக் கொண்டனர்.      நானும் எனது வழிகாட்டி ஆசிரியர் கூறும் கருத்துக்களை பின்பற்றி எனது கற்பித்தல் திறனை மேம்படுத்தி கொள்ள இது உதவியாக அமைகிறது.

சமூக அறிவியல் மன்றம்

      இன்று பள்ளியில்  "சமூக அறிவியல் மன்றம்"  நடைபெற்றது.   சுகாதாரம்: ::::::::::::::::::::::       இதில் 6-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் மற்றும் மாணவிகள் நாம் அனைவரும் அன்றாடம் வாழ்வில் எவ்வாறு சுத்தமாக, தூயமையாக இருக்க வேண்டும் என  "சுகாதாரம்"  பற்றிய தகவல்களை பகிர்ந்து கொள்ள  நாடகம் நடத்தினர்.       * காலையில் எழுந்ததும் பல் துலக்குதல்,       * படித்தல்,       * கழிவறை பயன்படுத்துதல்,       * நாள்தோறும் பள்ளிக்கு செல்ல வேண்டும். சாலை பாதுகாப்பு மற்றும் விதிகள்: ::::::::::::::  ::::::::::::::::::::::  ::::::::::::::  ::::::::::::::::::       இதில்  8-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள்  "சாலை பாதுகாப்பு"  மற்றும் "சாலை விதிகளை பின்பற்றும் முறைகள்"  பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பல தகவல்களை பகிர்ந்து கொண்டனர். அவற்றுள் சில,      * வாகனம் ஓட்டும் போது தலைக்கவசம் அணிதல்,      * பயனத்தின் போது கைப்பேசி பயன்படுத்தக்கூடாது.

அறிவியல் மற்றும் தமிழ் மன்றங்கள்

  இன்று பள்ளியில்          "அறிவியல் மன்றம்"        " தமிழ் மன்றம்"  ஆகிய இரண்டு மன்றங்கள் நடைபெற்றது. தமிழ் மன்றம்: :::::::::::::::::::::::::::::       *  அதில் 7- ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் மற்றும் மாணவிகள் கலந்து கொண்டு மிகவும் சிறப்பாக  "பட்டத்து யானை"  பற்றி நாடகம் ஒன்று நடித்தனர். அறிவியல் மன்றம்: ::::::::::::::::::::::::::::::::::::::::         * இதில் 8-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் மற்றும் மாணவிகள் கலந்து கொண்டு  "அன்றாடம் சத்துள்ள உணவுகளை சாப்பிட வேண்டியதன்  அவசியம்" பற்றியும் விரிவாக, சிறப்பாக நாடகமாக நடித்துக் காட்டினார்கள்.

ART AND GRAFT

  இன்று பள்ளியில்   "ART AND GRAFT"  பயிற்சிக்காக டெல்லியில் இருந்து ஒரு பயிற்சி ஆசிரியர் வந்து பள்ளி மாணவர்களுக்கு மிகவும் பிடிக்கும் வகையில் பலவிதமான வண்ணங்களில், பல்வேறு வகையான வடிவங்களில் பல கைவினை பொருட்கள் செய்து காட்டினார்.     மாணவர்களே பலவிதமான பொருட்களை செய்து பயிற்சி பெறுவதற்காக இலவச பயிற்சி புத்தகம், அதனோடு சில வண்ண காகிதத்தாள்களும் ரூ.30 - க்கு வழங்கினார்.      இந்த மாதிரி வகுப்புகள்  மாணவர்களின் கல்வி திறனையும், வாழ்க்கைக்கு உதவி செய்யும் வகையில் ஒரு கைத்தொழிலாகவும் அமைகிறது.       

இரண்டு மூளைவிட்டம், ஒரு கோணம்

     இன்று 8-ம் வகுப்பில் பயிர்சி - 4.3 -ல் இணைகரத்தில் அடுத்த இரண்டு                வகைகள் மற்றும் அதன் பரப்பாளவு, வரைமுறைகள் ஆகியவற்றை தெளிவாக நடத்தினேன்.       எனது வழிகாட்டி ஆசிரியரும் தேவையான ஆலோசனைகள், சிறந்த கற்பித்தலுக்கான வழிமுறைகளை கூறுகிறார்.        நான் அதற்க்காக வண்ண வரைபடத்தாளில் கலர் பேனாக்கள், டேப் என பலவற்றை பல வகைகளில் பயன்படுத்தி  "இணைகரம்"  மாணவர்களுக்கு புரியும்படி தெளிவாக பெறிதாக வரைந்து காட்டினேன்.       மாணவர்களும் அதை ஆர்வமுடன் கவனித்தனர்.  அவர்கள் மூலைவிட்டம் அளவிடும் முறை, குத்துயரம் காணும் முறை, கோணம் வைத்தல், பரப்பளவு காணல் என பல இடங்களில் உள்ள அனைத்து விதமான சந்தேகங்களையும் கேட்டனர்.        நான் எனது வழிகாட்டி ஆசிரியரிடம் அதை பற்றி தெரிந்து கொண்டேன். மாணவர்களுக்கும் தெளிவாக கூறினேன்.           

இணைகரம், அதன் பரப்பளவு காணல்

     இன்று 8-ம் வகுப்பில்  "செய்முறை வடிவியல்"  பாடத்தில் மூன்றாம் பிரிவான இணைகரம் மற்றும் அதன் பரப்பளவு காணும் முறை பற்றியும் தெளிவாக ,  விரிவாக நடத்தினேன்.       மாணவர்களும் அதை கவனித்து நோட்டில் எழுத்திக்கொண்டனர்.   பயிர்சி - 4.3 -ல் உள்ள சில கணக்குகளை நான் நடத்தினேன்.  அதே மாடலில் உள்ள கணக்குகளை வீட்டுப்பாடமாக அளித்தேன்.       இன்று எனது வழிகாட்டி ஆசிரியர் நான் கற்பிக்கும் போது எனது கற்பித்தல் முறை, கற்பித்தலுக்கு பயன்படுத்திய கருவிகள் அனைத்தையும் நல்ல முறையில் அமைய வேண்டும் என சில அறிவுரைகள் வழங்கினார்.       இதன் மூலம் நான் எனது கற்பித்தல் திறனை அதிகரிக்க உதவுகிறது.