இன்று நான் பாடங்களையும் பாடபிரிவுகளையும் புரிந்துக்கொள்ளல் தேர்வு எழுதினேன். அதில் நான் அனைத்து கேள்விகளும் எழுதினேன். 10 நிமிடத்திற்கு முன்பே முடித்துவிட்டேன்.
மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்திட ஆசிரியர்- மாணவர் இடைவினையோடு மட்டுமின்றி சிறந்த கற்பித்தல் கருவிகள் மூலம் நாம் அவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தலாம். கற்பித்தல் வளங்களாக கணினி, விசுவலைசர், ப்ரொஜக்டர், TLM, உருவ பொம்மைகள் என பல வகையான கற்பித்தல் வளங்கள் பயன்பாட்டில் உள்ளன. ஒரு ஆசிரியராக நான் அனைத்து வளங்களையும் முறையாக பயன்படுத்திட கற்று கொண்டேன். மேலும் , அதை தொடர்ந்து எனது கற்பித்தல் செயலில் நான் என்ன செய்ய வேண்டும் என எனது ஆசிரியரும் தெளிவாக விளக்கினார். கற்பித்தல் வளங்கள் மூலம் மாணவர்களின் அறித்திரன், கற்றல் தேர்ச்சி, மனப்பான்மை, நம்பிக்கை, முயற்சி, மேலும் கற்க ஆர்வம் தூண்டும் வகையில் அமைய வேண்டும் என புரிந்து கொண்டேன்.
வகுப்பில் இன்று கல்வியில் நவீன தொழில் நுட்ப வளர்ச்சியால் பல்வேறு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. கல்வியில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களாவன; 1. திண்ணைப் பள்ளியில் இருந்து நவீன வகுப்பரை, 2. சான்றிதழ் வழங்கப்படுதல், 3. அறிவியல் வளர்ச்சி, 4. இணையதள வசதி, 5. பல்வேறு வகையான கற்பித்தல் கருவிகள், என பல முறைகளில் கல்வியில் பல இடங்களில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. யோகாவில் "உடல்நலக் கல்வி" பற்றியும் அதனால் ஏற்படும் நன்மைகள், அதற்கான காரணம் ஆகியவற்றை தெரிந்து கொண்டேன்.
இதை ஒன்றிணைந்த கலைத்திட்டம் என்பர். ஒரு குறிப்பிட்ட பாடத்தலைப்பில் பல்வேறு பாடங்களை பல பிரிவுகளாக இணைத்து வழங்குவதே இதன் நோக்கமாகும். இதனால் மாணவர்கள் ஒரு பாடம் கற்பதன் வாயிலாக அனைத்து பாடம் பற்றிய தகவல்களை, அறிவை பெற்று உயர் நிலை தேர்ச்சி பெற்றிடுவர்.
Comments
Post a Comment